இந்தியாவின் வளர்ச்சி காடுகளை நம்பியே உள்ளது !
முன்னுரை.
ஒரு நாட்டின் முன்னேற்றத்திற்கும், மேம்பாட்டிற்கும் வனவளம் மிகவும் முக்கியமானதாகும். மரங்கள் நம் வாழ்வோடும் மதத்தோடும், கலாச்சாரத்தோடும் இணைந்துள்ளன. காங்கோ மற்றும் அமேசான் போன்ற வெப்ப மண்டலக் காடுகளில் மழை அதிகமாகப் பெய்யக் காரணம் அங்கு மரங்கள் நிறைந்திருப்பது தான். இன்று பெருமளவில் வனங்கள் அழிக்கப்பட்டு விளைநிலங்களாக மாற்றப்பட்டுவிட்டதால் பருவமழை தவற ஆரம்பித்துவிட்டது.
நம் நாட்டிலுள்ள தார், சஹாரா போன்ற பாலைவனங்கள் காடுகள் அழிந்ததால் ஏற்பட்டவைஎன்று கருதப்படுகின்றது
காடுகள் பொதுவாக இரண்டுவிதப் பணிகளைச் செய்து வருகின்றன. நமக்குத் தேவையான பல அத்தியாவசியமான பொருட்களைக் கொடுத்து வருகின்றன. நாம் ஆரோக்கியமான வாழ நமது சுற்றுப்புறச் சூழ்நிலையைப் பாதுகாத்து வருகின்றன.
இந்தியாவின் மொத்த நிலப்பரப்பில் சுமார் 22.8 % காடுகளே! தற்போதைய நிலவரப்படி சுமார் 3,775 சதுர கிலோ மீட்டர்கள்! சில வருடங்களுக்கு முன்பு இருந்ததைவிட சுமார் 1,309 சதுர கி.மீ. பரப்பளவு அதிகமாகியிருக்கிறது. இது உலகின் மொத்த வனப்பரப்பில் இரண்டு சதவிகிதம். இயற்கையான, ஆரோக்கியமான உயிர் வாழ்க்கைக்கு வனங்கள் மிக அவசியம். மேலும் நீர் வளம் பெருகவும், சூழல் பாதுகாப்புக்கும் வனங்கள் மிக முக்கியம்!
காலநிலை மாற்றங்களுக்கு ஏற்ப இந்தியக் காடுகள் வெப்பப்பகுதி, மித வெப்பப்பகுதி, சமவெப்பப் பகுதி, ஆல்ப்பைன் பகுதி என்று வகைப்படுத்தப்பட்டுள்ளன.
கிடைக்கும் மழைப்பொழிவு, மண்ணின் தன்மை, பொதுத் தோற்றம், உயிரிகள் போன்றவற்றின் அடிப்படையில் ஆறு விரிந்த பகுதிகளாக பதிமூன்று முக்கிய இனக்காடுகள் இந்தியாவில் இருப்பதாக அறிஞர்கள் கருதுகின்றனர்.
இனி காடுகளால் உண்டாகும் நன்மைகளை பற்றி பார்ப்போம்.
இந்தியாவைப் பொருத்தவரை காடுகள் செய்யும் மிகப் பெரிய நன்மை என்பது மழைவளம் தருவதுதான்
மழை வளம் சீராக இருப்பதால் தான் நம் நாட்டில் உணவு உற்பத்தியில் தன்னிறைவை எட்டமுடிகிறது!
அரிசி, கோதுமை, பிற தானியங்கள் காய்கறிகள், பழங்கள் போன்றவை நமது தேவைக்கேற்ப
விளைவிக்கப்
படுகின்றன.
ஒருவேளை எரிபொருளை போல உணவு தேவைக்கும் நாம் மற்ற நாடுகளை நம்பி இருந்தால் அது பொருளாதாரத்தில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி இருக்கும்.
காடுகள் செய்யும் மற்றொரு பேருதவி கால்நடை வளர்ப்புக்கு பக்கபலமாக இருப்பதுதான்!
நமது நாட்டிலுள்ள கால்நடைகளில் ஏறத்தாழ ஆறில் ஒரு பங்கு விலங்குகள் தீவனத்திற்குக் காடுகளையே முழுவதும் நம்பியுள்ளன.
போதிய மேய்ச்சல் நிலங்கள் இல்லை என்றால் நம்மால் கால்நடைகளை முறையாக பராமரிக்க முடியாது.
பால், இறைச்சி மட்டுமல்லாது தோல் பொருட்களையும் உற்பத்தி செய்து அவற்றை ஏற்றுமதி செய்ய முடிகிறது என்றால் அதற்கு அடிப்படை ஆதாரமாக விளங்குவது காடுகள்தான்!
நாம் எழுதுவதற்கு பயன்படுத்தும் காகிதம் தயாரிக்க உதவும் மூலப் பொருளும் காடுகளில் உள்ள மரங்களில் இருந்து தான் கிடைக்கிறது அதை அழிக்க பயன்படுத்தும் ரப்பரும் காடுகளில் இருந்து தான் கிடைக்கிறது!
நம் நாட்டிலுள்ள சுமார் 4 கோடி ஆதிவாசிகளில் பாதிப்பேர் தங்கள் உணவுக்காக காடுகளையே நம்பியுள்ளனர். இலுப்பை போன்ற சுமார் 100 வகை மரங்கள் இவர்களது உணவுத் தேவையை ஏதேனும் ஒரு வடிவத்தில் பூர்த்தி செய்து வருகின்றன.
இன்று வீடுகள் கட்ட பயன்படுத்தப்படும் கதவு ஜன்னல் கட்டில் மேஜை உட்பட பெரிய தொழிற்சாலைகளின் தளவாடங்கள் வரை உற்பத்தி செய்ய மரங்கள் பெரிதும் பயன்படு கின்றன!
சித்த மருத்துவம், ஆயுர்வேதம், யுனானி என அனைத்து வகை மருத்துவர்களுக்கும் உதவும் அற்புதமான மூலிகைகளை வனங்களே தருகின்றன.
சந்தனமரம் சோப்புகள் செய்யவும் வாசனை திரவியங்களிலும் பயன்படுத்தப்படுகிறது. யூகலிப்டஸ், ஃபைன் மரங்கள் தைலங்கள் தயாரிக்க பயன்படுத்தப்
படுகின்றன.
தீக்குச்சி, விளையாட்டுக் கருவிகள், பொம்மைகள் போன்றவை தயாரிக்கும் தொழிற்சாலைகள் தங்கள் மூலப்பொருட்களுக்குக் காடுகளையே நம்பியுள்ளன.
என்னதான் மனிதன் இந்த உலகம் முழுக்க அதிகாரம் செலுத்தினாலும் அவன் இந்த பூமியில் நிலைத்து வாழ அனைத்து உயிர்களும் நலமுடன் வாழ்வது மிக அவசியமாகும்.
இந்தப் பல்லுயிர் பெருக்கத்திற்கும் அவற்றின் நலத்திற்கும் காடுகள் பெரிதும் உதவுகின்றன.
புவிவெப்பமடைதல், சுனாமி போன்ற பலவிதமான இயற்கை சீற்றங்களில் இருந்தும் இன்றளவும் காடுகள்தான் நம்மை பாதுகாத்துக் கொண்டிருக்கின்றன.
முடிவுரை
இவ்வாறாக மழைவளம், விவசாயம், உணவு உற்பத்தி,
கால்நடை வளர்ப்பு,
பிற பொருள் உற்பத்தி, தொழிற்சாலை தளவாடங்கள், மருத்துவகுணம் நிறைந்த பொருட்கள் என அத்தனை பயன்களையும் காடுகள் நமக்கு தருகின்றன.
எனவே நம் நாட்டின் வளர்ச்சிக்கு மட்டுமல்ல நம் அன்றாட வாழ்க்கைக்கும் உயிர்நாடியாக விளங்குபவை காடுகளே! அத்தகைய காடுகளை எந்நாளும் அழிந்துவிடாமல் முறையாகப் பாதுகாப்போம்!
வளம் பெறுவோம்!
நன்றி வணக்கம்.
முன்னுரை.
ஒரு நாட்டின் முன்னேற்றத்திற்கும், மேம்பாட்டிற்கும் வனவளம் மிகவும் முக்கியமானதாகும். மரங்கள் நம் வாழ்வோடும் மதத்தோடும், கலாச்சாரத்தோடும் இணைந்துள்ளன. காங்கோ மற்றும் அமேசான் போன்ற வெப்ப மண்டலக் காடுகளில் மழை அதிகமாகப் பெய்யக் காரணம் அங்கு மரங்கள் நிறைந்திருப்பது தான். இன்று பெருமளவில் வனங்கள் அழிக்கப்பட்டு விளைநிலங்களாக மாற்றப்பட்டுவிட்டதால் பருவமழை தவற ஆரம்பித்துவிட்டது.
நம் நாட்டிலுள்ள தார், சஹாரா போன்ற பாலைவனங்கள் காடுகள் அழிந்ததால் ஏற்பட்டவைஎன்று கருதப்படுகின்றது
காடுகள் பொதுவாக இரண்டுவிதப் பணிகளைச் செய்து வருகின்றன. நமக்குத் தேவையான பல அத்தியாவசியமான பொருட்களைக் கொடுத்து வருகின்றன. நாம் ஆரோக்கியமான வாழ நமது சுற்றுப்புறச் சூழ்நிலையைப் பாதுகாத்து வருகின்றன.
இந்தியாவின் மொத்த நிலப்பரப்பில் சுமார் 22.8 % காடுகளே! தற்போதைய நிலவரப்படி சுமார் 3,775 சதுர கிலோ மீட்டர்கள்! சில வருடங்களுக்கு முன்பு இருந்ததைவிட சுமார் 1,309 சதுர கி.மீ. பரப்பளவு அதிகமாகியிருக்கிறது. இது உலகின் மொத்த வனப்பரப்பில் இரண்டு சதவிகிதம். இயற்கையான, ஆரோக்கியமான உயிர் வாழ்க்கைக்கு வனங்கள் மிக அவசியம். மேலும் நீர் வளம் பெருகவும், சூழல் பாதுகாப்புக்கும் வனங்கள் மிக முக்கியம்!
காலநிலை மாற்றங்களுக்கு ஏற்ப இந்தியக் காடுகள் வெப்பப்பகுதி, மித வெப்பப்பகுதி, சமவெப்பப் பகுதி, ஆல்ப்பைன் பகுதி என்று வகைப்படுத்தப்பட்டுள்ளன.
கிடைக்கும் மழைப்பொழிவு, மண்ணின் தன்மை, பொதுத் தோற்றம், உயிரிகள் போன்றவற்றின் அடிப்படையில் ஆறு விரிந்த பகுதிகளாக பதிமூன்று முக்கிய இனக்காடுகள் இந்தியாவில் இருப்பதாக அறிஞர்கள் கருதுகின்றனர்.
இனி காடுகளால் உண்டாகும் நன்மைகளை பற்றி பார்ப்போம்.
இந்தியாவைப் பொருத்தவரை காடுகள் செய்யும் மிகப் பெரிய நன்மை என்பது மழைவளம் தருவதுதான்
மழை வளம் சீராக இருப்பதால் தான் நம் நாட்டில் உணவு உற்பத்தியில் தன்னிறைவை எட்டமுடிகிறது!
அரிசி, கோதுமை, பிற தானியங்கள் காய்கறிகள், பழங்கள் போன்றவை நமது தேவைக்கேற்ப
விளைவிக்கப்
படுகின்றன.
ஒருவேளை எரிபொருளை போல உணவு தேவைக்கும் நாம் மற்ற நாடுகளை நம்பி இருந்தால் அது பொருளாதாரத்தில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி இருக்கும்.
காடுகள் செய்யும் மற்றொரு பேருதவி கால்நடை வளர்ப்புக்கு பக்கபலமாக இருப்பதுதான்!
நமது நாட்டிலுள்ள கால்நடைகளில் ஏறத்தாழ ஆறில் ஒரு பங்கு விலங்குகள் தீவனத்திற்குக் காடுகளையே முழுவதும் நம்பியுள்ளன.
போதிய மேய்ச்சல் நிலங்கள் இல்லை என்றால் நம்மால் கால்நடைகளை முறையாக பராமரிக்க முடியாது.
பால், இறைச்சி மட்டுமல்லாது தோல் பொருட்களையும் உற்பத்தி செய்து அவற்றை ஏற்றுமதி செய்ய முடிகிறது என்றால் அதற்கு அடிப்படை ஆதாரமாக விளங்குவது காடுகள்தான்!
நாம் எழுதுவதற்கு பயன்படுத்தும் காகிதம் தயாரிக்க உதவும் மூலப் பொருளும் காடுகளில் உள்ள மரங்களில் இருந்து தான் கிடைக்கிறது அதை அழிக்க பயன்படுத்தும் ரப்பரும் காடுகளில் இருந்து தான் கிடைக்கிறது!
நம் நாட்டிலுள்ள சுமார் 4 கோடி ஆதிவாசிகளில் பாதிப்பேர் தங்கள் உணவுக்காக காடுகளையே நம்பியுள்ளனர். இலுப்பை போன்ற சுமார் 100 வகை மரங்கள் இவர்களது உணவுத் தேவையை ஏதேனும் ஒரு வடிவத்தில் பூர்த்தி செய்து வருகின்றன.
இன்று வீடுகள் கட்ட பயன்படுத்தப்படும் கதவு ஜன்னல் கட்டில் மேஜை உட்பட பெரிய தொழிற்சாலைகளின் தளவாடங்கள் வரை உற்பத்தி செய்ய மரங்கள் பெரிதும் பயன்படு கின்றன!
சித்த மருத்துவம், ஆயுர்வேதம், யுனானி என அனைத்து வகை மருத்துவர்களுக்கும் உதவும் அற்புதமான மூலிகைகளை வனங்களே தருகின்றன.
சந்தனமரம் சோப்புகள் செய்யவும் வாசனை திரவியங்களிலும் பயன்படுத்தப்படுகிறது. யூகலிப்டஸ், ஃபைன் மரங்கள் தைலங்கள் தயாரிக்க பயன்படுத்தப்
படுகின்றன.
தீக்குச்சி, விளையாட்டுக் கருவிகள், பொம்மைகள் போன்றவை தயாரிக்கும் தொழிற்சாலைகள் தங்கள் மூலப்பொருட்களுக்குக் காடுகளையே நம்பியுள்ளன.
என்னதான் மனிதன் இந்த உலகம் முழுக்க அதிகாரம் செலுத்தினாலும் அவன் இந்த பூமியில் நிலைத்து வாழ அனைத்து உயிர்களும் நலமுடன் வாழ்வது மிக அவசியமாகும்.
இந்தப் பல்லுயிர் பெருக்கத்திற்கும் அவற்றின் நலத்திற்கும் காடுகள் பெரிதும் உதவுகின்றன.
புவிவெப்பமடைதல், சுனாமி போன்ற பலவிதமான இயற்கை சீற்றங்களில் இருந்தும் இன்றளவும் காடுகள்தான் நம்மை பாதுகாத்துக் கொண்டிருக்கின்றன.
முடிவுரை
இவ்வாறாக மழைவளம், விவசாயம், உணவு உற்பத்தி,
கால்நடை வளர்ப்பு,
பிற பொருள் உற்பத்தி, தொழிற்சாலை தளவாடங்கள், மருத்துவகுணம் நிறைந்த பொருட்கள் என அத்தனை பயன்களையும் காடுகள் நமக்கு தருகின்றன.
எனவே நம் நாட்டின் வளர்ச்சிக்கு மட்டுமல்ல நம் அன்றாட வாழ்க்கைக்கும் உயிர்நாடியாக விளங்குபவை காடுகளே! அத்தகைய காடுகளை எந்நாளும் அழிந்துவிடாமல் முறையாகப் பாதுகாப்போம்!
வளம் பெறுவோம்!
நன்றி வணக்கம்.