(படித்ததில் பிடித்தது)
ஒரு #அர்த்தமுள்ள சின்ன கதை…
வட அமெரிக்காவில் ஒரு பறவை இனம் அழிந்து வந்தது.
அதை பாதுகாக்க அந்த நாட்டு அரசாங்கம் முடிவு செய்தது.
அதற்காக உயிரியல் பூங்காவில் தனியாக ஒரு அறை அமைக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டது.
அந்த பறவைக்கு தனிப் பாதுகாவலர், தனி உணவு அதற்குத் தேவையான அனைத்து வசதிகளும் செய்துத் தரப்பட்டது.
கோடைகாலத்தை சமாளிக்க தனியாக குளிர் அறையும் அமைக்கப்பட்டது.
அந்த பறவை இனம் பெருகியது.
பின்னர் வெளி உலகத்துக்கு சுதந்திரமாக பறக்க விடப்பட்டது.
அதற்கு தன் எதிரிகள் யார் என்றுத் தெரியவில்லை. அதனால் அந்தப் பறவை எதிரிகளுக்கு உணவானது
அந்த பறவைக்கு மின் கம்பங்களில் எப்படி அமர்வது என்றுத் தெரியவில்லை.
பறவைகள் அழிய தொடங்கின (எதிரிகளுக்கு உணவாகி, மின் கம்பங்களில் கருகி, வண்டிகளில் மோதியும்).
எந்த இனம் அழிய கூடாது என்று முயற்சி எடுக்கப்பட்டதோ, அந்த இனம் அழிய காரணமானது.
அதே போல் தான் நாம். நமக்கு கிடைக்காதவைகளை நம் பிள்ளைகளுக்கு கிடைக்கட்டும் என்று கொடுத்து நாம் அழகு பார்க்கிறோம். அவர்களுடைய அழிவுக்கும் நாமே உறுதுணையாய் இருக்கிறோம்.
பூங்காவில் இருக்கும் விலங்குக்கு வேட்டையாட தெரியாது.
அதே போல் தான் அதிகம் செல்லம் கொடுக்கும் பிள்ளைகளால் தோல்விகளை நிச்சயமாகத் தாங்க முடியாது.
உங்கள் பிள்ளைகளை வெளி உலகத்தை தானாக உணர வழி விடுங்கள். உங்கள் கைக்குள்ளேயே வைத்து பாதுகாக்கிறோம் என்று அவர்களை சுய சிந்தனையற்றவர்களாக ஆக்கி விடாதீர்கள்.
நல்லது கெட்டதை தானாக கற்று கொள்ளட்டும்.
நம் பிள்ளைகளுக்கு அதிகம் செல்லம் கொடுத்து விட்டோம். அவன்/அவள் வெளி உலகத்தை எப்படி சமாளிக்க போகிறார்கள் என்கிற சந்தேகம் உங்களுக்கு வேண்டாம்.
P
நீங்கள் கற்றுக் கொடுக்க மறந்த
பாடத்தை இந்த சமூகம் மற்றும் இயற்கை கற்றுக் கொடுக்கும். எப்படி எனக்கும் என்னை போல் பலருக்கும் கற்று கொடுத்ததோ அதே போல.
இதைத் தான் ஆங்கிலத்தில்
#Survival_of_Fittest என்று நாம் சொல்லுகிறோம்.
அதை நோக்கித் தான் எல்லா ஜீவராசிகளும் ஓடி கொண்டிருக்கின்றன.
.. ❣ ❣ ❣ ❣ ❣ ❣ ❣ ❣ ❣
வெங்கட்ராமன் 🌷 🌷
ஒரு #அர்த்தமுள்ள சின்ன கதை…
வட அமெரிக்காவில் ஒரு பறவை இனம் அழிந்து வந்தது.
அதை பாதுகாக்க அந்த நாட்டு அரசாங்கம் முடிவு செய்தது.
அதற்காக உயிரியல் பூங்காவில் தனியாக ஒரு அறை அமைக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டது.
அந்த பறவைக்கு தனிப் பாதுகாவலர், தனி உணவு அதற்குத் தேவையான அனைத்து வசதிகளும் செய்துத் தரப்பட்டது.
கோடைகாலத்தை சமாளிக்க தனியாக குளிர் அறையும் அமைக்கப்பட்டது.
அந்த பறவை இனம் பெருகியது.
பின்னர் வெளி உலகத்துக்கு சுதந்திரமாக பறக்க விடப்பட்டது.
அதற்கு தன் எதிரிகள் யார் என்றுத் தெரியவில்லை. அதனால் அந்தப் பறவை எதிரிகளுக்கு உணவானது
அந்த பறவைக்கு மின் கம்பங்களில் எப்படி அமர்வது என்றுத் தெரியவில்லை.
பறவைகள் அழிய தொடங்கின (எதிரிகளுக்கு உணவாகி, மின் கம்பங்களில் கருகி, வண்டிகளில் மோதியும்).
எந்த இனம் அழிய கூடாது என்று முயற்சி எடுக்கப்பட்டதோ, அந்த இனம் அழிய காரணமானது.
அதே போல் தான் நாம். நமக்கு கிடைக்காதவைகளை நம் பிள்ளைகளுக்கு கிடைக்கட்டும் என்று கொடுத்து நாம் அழகு பார்க்கிறோம். அவர்களுடைய அழிவுக்கும் நாமே உறுதுணையாய் இருக்கிறோம்.
பூங்காவில் இருக்கும் விலங்குக்கு வேட்டையாட தெரியாது.
அதே போல் தான் அதிகம் செல்லம் கொடுக்கும் பிள்ளைகளால் தோல்விகளை நிச்சயமாகத் தாங்க முடியாது.
உங்கள் பிள்ளைகளை வெளி உலகத்தை தானாக உணர வழி விடுங்கள். உங்கள் கைக்குள்ளேயே வைத்து பாதுகாக்கிறோம் என்று அவர்களை சுய சிந்தனையற்றவர்களாக ஆக்கி விடாதீர்கள்.
நல்லது கெட்டதை தானாக கற்று கொள்ளட்டும்.
நம் பிள்ளைகளுக்கு அதிகம் செல்லம் கொடுத்து விட்டோம். அவன்/அவள் வெளி உலகத்தை எப்படி சமாளிக்க போகிறார்கள் என்கிற சந்தேகம் உங்களுக்கு வேண்டாம்.
P
நீங்கள் கற்றுக் கொடுக்க மறந்த
பாடத்தை இந்த சமூகம் மற்றும் இயற்கை கற்றுக் கொடுக்கும். எப்படி எனக்கும் என்னை போல் பலருக்கும் கற்று கொடுத்ததோ அதே போல.
இதைத் தான் ஆங்கிலத்தில்
#Survival_of_Fittest என்று நாம் சொல்லுகிறோம்.
அதை நோக்கித் தான் எல்லா ஜீவராசிகளும் ஓடி கொண்டிருக்கின்றன.
.. ❣ ❣ ❣ ❣ ❣ ❣ ❣ ❣ ❣
வெங்கட்ராமன் 🌷 🌷
No comments:
Post a Comment