Monday, 5 August 2019

 "அந்த மழை இரவு "


உன் இல்லம்
வந்த நான்
என் இல்லம்
திரும்ப முடியாமல் மாட்டிக் கொண்ட
 "அந்த மழை இரவு "


இடி மின்னலுக்கு பயந்து நீ என்னை இறுக அணைத்துக் கொண்ட.           
  "அந்த மழை இரவு  "


வேண்டாம்; என்று தடுத்த நம் மனசாட்சியை
நம் ஆடைகளால் மூடி மறைத்துவிட்டு நாம் எல்லை மீறிய
  "அந்த மழை இரவு "



நீந்தி வந்த தென்றலும்,
நீ வளர்க்கும்
கரடி பொம்மையும் மட்டுமே அறிந்து நமக்குள்ளேயே
புதைந்து போன
   "அந்த மழை இரவு "


நாம் இன்று பிரிந்தாலும் நம் மனதை
விட்டுப் பிரியாத
  "அந்த மழை இரவு "



நம்மை பிரித்தது விதியா?
விதியின் மேல்
பழியைப் போட்டு நாமேதானா?
பதில் சொல்லத் தெரியவில்லை .




ஜன்னலோரம் நான்! இன்று பெய்யும்
மழைத்துளிகளை ரசித்தபடி!
நமக்கு நம்மை ஞாபகப்படுத்துகிறதோ?
   "இந்த மழை இரவு" 

No comments:

Eat that frog book's main points in Tamil காலை எழுந்ததும் தவளை

 பிரையன் டிரேசி அவர்கள் எழுதிய   "காலை எழுந்ததும் தவளை" என்ற நூலில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கியமான கருத்துகளை இங்கே தொகுத்துள்ளேன்...