"அந்த மழை இரவு "
உன் இல்லம்
வந்த நான்
என் இல்லம்
திரும்ப முடியாமல் மாட்டிக் கொண்ட
"அந்த மழை இரவு "
இடி மின்னலுக்கு பயந்து நீ என்னை இறுக அணைத்துக் கொண்ட.
"அந்த மழை இரவு "
வேண்டாம்; என்று தடுத்த நம் மனசாட்சியை
நம் ஆடைகளால் மூடி மறைத்துவிட்டு நாம் எல்லை மீறிய
"அந்த மழை இரவு "
நீந்தி வந்த தென்றலும்,
நீ வளர்க்கும்
கரடி பொம்மையும் மட்டுமே அறிந்து நமக்குள்ளேயே
புதைந்து போன
"அந்த மழை இரவு "
நாம் இன்று பிரிந்தாலும் நம் மனதை
விட்டுப் பிரியாத
"அந்த மழை இரவு "
நம்மை பிரித்தது விதியா?
விதியின் மேல்
பழியைப் போட்டு நாமேதானா?
பதில் சொல்லத் தெரியவில்லை .
ஜன்னலோரம் நான்! இன்று பெய்யும்
மழைத்துளிகளை ரசித்தபடி!
நமக்கு நம்மை ஞாபகப்படுத்துகிறதோ?
"இந்த மழை இரவு"
உன் இல்லம்
வந்த நான்
என் இல்லம்
திரும்ப முடியாமல் மாட்டிக் கொண்ட
"அந்த மழை இரவு "
இடி மின்னலுக்கு பயந்து நீ என்னை இறுக அணைத்துக் கொண்ட.
"அந்த மழை இரவு "
வேண்டாம்; என்று தடுத்த நம் மனசாட்சியை
நம் ஆடைகளால் மூடி மறைத்துவிட்டு நாம் எல்லை மீறிய
"அந்த மழை இரவு "
நீந்தி வந்த தென்றலும்,
நீ வளர்க்கும்
கரடி பொம்மையும் மட்டுமே அறிந்து நமக்குள்ளேயே
புதைந்து போன
"அந்த மழை இரவு "
நாம் இன்று பிரிந்தாலும் நம் மனதை
விட்டுப் பிரியாத
"அந்த மழை இரவு "
நம்மை பிரித்தது விதியா?
விதியின் மேல்
பழியைப் போட்டு நாமேதானா?
பதில் சொல்லத் தெரியவில்லை .
ஜன்னலோரம் நான்! இன்று பெய்யும்
மழைத்துளிகளை ரசித்தபடி!
நமக்கு நம்மை ஞாபகப்படுத்துகிறதோ?
"இந்த மழை இரவு"
No comments:
Post a Comment