Monday, 5 August 2019

என் காஷ்மீர் சகோதரனுக்கு ஒரு அன்பு கடிதம்!

சகோதரனே!
உன் சுதந்திரம் பறிக்கப்பட்டு விட்டது; என்று குமுறுகிறாயா?
இல்லவே இல்லை; இப்போது தான் உன் கால்கட்டு அவிழ்க்கப்பட்டுள்ளது; இனி நீ சிறகடித்து பறக்கலாம்!

கூட்டுப்புழுவாய் முடங்கிக்கிடந்த நீ,
 இனி பட்டாம்பூச்சியாய் சுற்றித் திரியலாம்!

உன்னைச் சேர்த்தணைத்து சொந்தம் கொண்டாட இருநூறுகோடிக் கரங்கள் காத்திருக்கையில்,
 நீ ஏன் போர்வையைப் போர்த்திக்கொண்டு தனித்திருக்கிறாய் ?

பனிக்கட்டி கூடப்
 பற்றி எரிகின்ற
 உன்தேசம், இனியாவது கொஞ்சம் பாதுகாப்பை உணரட்டும்!
 எங்கள் பாசத்தில்
உருகட்டும்!

ஜனநாயகம்
பறிக்கப்பட்டதாய்ப் பதறாதே!;
ஜனநாயகம் தோற்றதில்லை! சர்வாதிகாரம் வென்றதில்லை! ஜனநாயகத்தின் பக்கங்களில் சில சமயம் எழுத்துப் பிழைகள் நேர்வதுண்டு;
 பிரிதொரு நாளில் அது சரி செய்யப்பட்டு விடும் .

கைவிலங்கு
பூட்டப்பட்டதாய்க் கலங்காதே
உன் சிறைச்சாலை இப்போதுதான் திறக்கப்பட்டிருக்கிறது! 

No comments:

Eat that frog book's main points in Tamil காலை எழுந்ததும் தவளை

 பிரையன் டிரேசி அவர்கள் எழுதிய   "காலை எழுந்ததும் தவளை" என்ற நூலில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கியமான கருத்துகளை இங்கே தொகுத்துள்ளேன்...