Tuesday, 6 August 2019

எனது ஹைகூ கவிதைகள்!

            "ஆஞ்சநேயர்"

ஆயிரம் வடைகள் மாலையாய் கழுத்தில்; உண்ண மனமில்லாமல் ஆஞ்சநேயர்!




             " ஊடல்"

முகங்களைத்
திருப்பிக்கொண்டதால்
எங்கள் முதுகுகள்
நலம் விசாரித்துக் கொண்டன!





             " முரண் "


பல்லக்கில் வந்த ராஜாவுக்கு கால்அமுக்கி விடுகிறான்;
சேவகன்!

             .................


சூரிய உதயம் கண்டு கொட்டாவி விடுகிறார்; இரவு காவலாளி!

            ...................



மீன்களின் இறந்த காலத்தில் தான் மீனவனின் எதிர்காலம் அடங்கியிருக்கிறது!

No comments:

Eat that frog book's main points in Tamil காலை எழுந்ததும் தவளை

 பிரையன் டிரேசி அவர்கள் எழுதிய   "காலை எழுந்ததும் தவளை" என்ற நூலில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கியமான கருத்துகளை இங்கே தொகுத்துள்ளேன்...