#பகுத்தறிவு
குக்கரில் சமைத்து சாப்பிடுவதால்தான் நமக்குப் பல வியாதிகள் வருகின்றன என்று மருத்துவர்களே நம்பத் துவங்கி இருப்பதுதான் வேதனை.
அல்லது அவர் கூறியதை மாப்பிள்ளை தங்க சொம்புலதான் தண்ணி குடிப்பாராம் என்று பரபரப்புக்காக செய்தி வெளியிட்ட கூத்தும் நடந்திருக்கலாம்.
ஆனால், வந்த செய்தியின் அடிப்படையிலேயே பார்ப்போம்.
இந்தியாவில் 1990 களில் 4-ம் இடத்தில் இருந்த இதய நோய் இன்றைக்கு முதல் இடத்தில். 10-ம் இடத்தில் இருந்த சர்க்கரை நோய் 2-ம் இடத்தில்.
என்று பெட்டிச் செய்தி சொல்கிறது. இதற்கும் குக்கரில்லாமல் அரிசி, பருப்பை வேகவைத்து சமைப்பதற்கும் என்ன சம்பந்தம்?
இந்தியா முழுமைக்கும் என்று ஆரம்பிக்கும்போதே குக்கர் தியரி அடிபட்டுப் போகிறது. வடக்கே குக்கரில் அரிசியும் பருப்பும் சாம்பாரும் யாரும் நம்மைப் போல செய்து 3 வேளையும் சாப்பிடுவதில்லை. ஆக, இந்தத் தியரி அங்கே அடிபட்டுப் போகிறது.
அமெரிக்காவில், ஜெர்மனில், ரஷ்யாவில் என்று டயபடிக்கும், இதய நோய்களும் உலகளாவிய பிரச்னை.
பிரச்னை குக்கர் அல்ல.
அரிசி அல்லது மாவுச்சத்து எனும் கார்போஹைட்ரேட். கடைசி வரை பிரச்னைகளின் ரூட் காஸான இதைப் பற்றிப் பேசவே மாட்டார்கள்.
இதய நோய்களுக்கு முக்கியக் காரணி - கொழுப்பு அடைத்துக்கொள்ளுதல், மரபணு கோளாறுகள், லாகிரி வஸ்துகள், உடற்பயிற்சி இல்லாமை, தூக்கமில்லாமை, ஸ்ட்ரெஸ், டயபடிஸ், பிபி.
மேலே சொன்னவற்றில் மரபணு பிரச்னைகள் தவிர்த்து மற்ற அனைத்தும், மாவுச்சத்தைக் குறைத்தாலே நல்ல நிவாரணம் கிடைக்கக் கூடடியவை. கூடவே லாகிரி வஸ்துக்களைத் தவிர்த்து, நடைப்பயிற்சி செய்தாலே போதும். சுகர் ஏறாது, பிபி நார்மலாகும், உடல் எடை குறையும், நல்ல உறக்கம் வரும், ஸ்ட்ரெஸ் குறையும்.
எந்த ஒரு எச்சரிக்கைக்குப் பின்னும் லாஜிக் இருக்கிறதா என்று பகுத்தறியுங்கள்.
கான்சர் செல்களின் வளர்ச்சிக்கான முக்கிய உணவும் க்ளுக்கோஸ்தான். அதை அபரிமிதமாக நம் உடலுக்குத் தருவது அரிசி போன்ற மாவுச்சத்து நிரம்பிய உணவுகள்தான்.
உங்களுக்கு உடல் பருமனும், டயபடிஸும், பிபியும் இருந்தால், குக்கர் இல்லை. மண்பானையில் சமைத்தாலும், அப்படியே அரிசியைச் சாப்பிட்டாலும் உங்கள் இதயம் டயபடிக்காலும், பிபியாலும் பிரச்னைக்குள்ளாகப் போவது உறுதி.
ஆக, புகையிலை எனும் மாவுச்சத்தை நீங்கள் பீடியாக (குக்கர்) பிடித்தாலும், சிகரெட்டாகப் (மண் பானை) பிடித்தாலும், சுருட்டாகப் (மைக்ரோவேவ்) அப்படியே வாயில் போட்டாலும் (சுட்டு சாப்பிடுவது) அதன் விளைவுகளை அனுபவிக்கத்தான் வேண்டும்.
ஆக, நாம் பகுத்தறியவேண்டியது:
குக்கரில்லாமல் அரிசி சோறு கஞ்சி வடித்து சாப்பிட்டால் இதய நோய், டயபடிக், பிபி வராதா?
வரும்.
குக்கரில்லாமல் அரிசி சோறு கஞ்சி வடித்து சாப்பிட்டால் கான்சர் வராதா?
வரும்.
குக்கரில்லாமல் அரிசி சோறு கஞ்சி வடித்து சாப்பிட்டால் கிட்னி பிரச்னை வராதா?
வரும்.
குக்கரில்லாமல் அரிசி சோறு கஞ்சி வடித்து சாப்பிட்டால் ஒபிசிட்டி வராதா?
வரும்.
குக்கரே பயன்படுத்தாத மக்களுக்கும் மேலே உள்ள பிரச்னைகள் உள்ளதா?
ஆம்.
குக்கர் பயன்படுத்தும் மக்களுக்கும் மேலே உள்ள பிரச்னைகள் உள்ளதா?
ஆம்.
சைவம் மட்டும் சாப்பிடும் மக்களுக்கும் மேலே உள்ள பிரச்னைகள் உள்ளதா?
ஆம்.
அசைவம் மட்டும் சாப்பிடும் மக்களுக்கும் மேலே உள்ள பிரச்னைகள் உள்ளதா?
ஆம்.
உலகின் எல்லா நாட்டு மக்களுக்கும், எல்லா மொழி, இன, வர்க்க மக்களுக்கும் மேலே உள்ள பிரச்னைகள் இருக்கிறதா?
ஆம்.
எனில் இதன் பொதுவான காரணி என்ன?
இவர்கள் அனைவரும் உண்ணும் பொதுவான, பிரதானமான உணவு என்ன?
மாவுச்சத்து எனப்படும் கார்போஹைட்ரேட். மற்றும் இனிப்புகள், ஜங்க், ப்ரைடு உணவுகள்.
எனில், கண்ணாடியைத் திருப்பினால் (கஞ்சி வடித்து சாப்பிட்டால்) எப்படி சார் ஆட்டோ ஓடும்?
-@-
வயிறு என்பது உடலின் இரண்டாவது மூளை.
அதற்கு குக்கர் சாதம், கஞ்சி வடித்த சாதம், மாப்பிள்ளை சம்பா, மருமகள் வம்பா என்பதெல்லாம் தெரியாது.
அதற்குத் தெரிந்தது மூன்று.
மாவுச்சத்து எனும் கார்போஹைட்ரேட்.
புரதம் எனும் ப்ரோட்டீன்.
கொழுப்பு எனும் ஃபேட்.
இதை எப்படி சரியான, தேவையான, நம் உடலுக்கேற்ற அளவுகளில் தரமாக உண்டு, உடற்பயிற்சி செய்து, விரதம் இருப்பது என்று கற்றுக்கொண்டால் எந்நாளும் ஆரோக்கியமே.
குக்கரில் சமைத்து சாப்பிடுவதால்தான் நமக்குப் பல வியாதிகள் வருகின்றன என்று மருத்துவர்களே நம்பத் துவங்கி இருப்பதுதான் வேதனை.
அல்லது அவர் கூறியதை மாப்பிள்ளை தங்க சொம்புலதான் தண்ணி குடிப்பாராம் என்று பரபரப்புக்காக செய்தி வெளியிட்ட கூத்தும் நடந்திருக்கலாம்.
ஆனால், வந்த செய்தியின் அடிப்படையிலேயே பார்ப்போம்.
இந்தியாவில் 1990 களில் 4-ம் இடத்தில் இருந்த இதய நோய் இன்றைக்கு முதல் இடத்தில். 10-ம் இடத்தில் இருந்த சர்க்கரை நோய் 2-ம் இடத்தில்.
என்று பெட்டிச் செய்தி சொல்கிறது. இதற்கும் குக்கரில்லாமல் அரிசி, பருப்பை வேகவைத்து சமைப்பதற்கும் என்ன சம்பந்தம்?
இந்தியா முழுமைக்கும் என்று ஆரம்பிக்கும்போதே குக்கர் தியரி அடிபட்டுப் போகிறது. வடக்கே குக்கரில் அரிசியும் பருப்பும் சாம்பாரும் யாரும் நம்மைப் போல செய்து 3 வேளையும் சாப்பிடுவதில்லை. ஆக, இந்தத் தியரி அங்கே அடிபட்டுப் போகிறது.
அமெரிக்காவில், ஜெர்மனில், ரஷ்யாவில் என்று டயபடிக்கும், இதய நோய்களும் உலகளாவிய பிரச்னை.
பிரச்னை குக்கர் அல்ல.
அரிசி அல்லது மாவுச்சத்து எனும் கார்போஹைட்ரேட். கடைசி வரை பிரச்னைகளின் ரூட் காஸான இதைப் பற்றிப் பேசவே மாட்டார்கள்.
இதய நோய்களுக்கு முக்கியக் காரணி - கொழுப்பு அடைத்துக்கொள்ளுதல், மரபணு கோளாறுகள், லாகிரி வஸ்துகள், உடற்பயிற்சி இல்லாமை, தூக்கமில்லாமை, ஸ்ட்ரெஸ், டயபடிஸ், பிபி.
மேலே சொன்னவற்றில் மரபணு பிரச்னைகள் தவிர்த்து மற்ற அனைத்தும், மாவுச்சத்தைக் குறைத்தாலே நல்ல நிவாரணம் கிடைக்கக் கூடடியவை. கூடவே லாகிரி வஸ்துக்களைத் தவிர்த்து, நடைப்பயிற்சி செய்தாலே போதும். சுகர் ஏறாது, பிபி நார்மலாகும், உடல் எடை குறையும், நல்ல உறக்கம் வரும், ஸ்ட்ரெஸ் குறையும்.
எந்த ஒரு எச்சரிக்கைக்குப் பின்னும் லாஜிக் இருக்கிறதா என்று பகுத்தறியுங்கள்.
கான்சர் செல்களின் வளர்ச்சிக்கான முக்கிய உணவும் க்ளுக்கோஸ்தான். அதை அபரிமிதமாக நம் உடலுக்குத் தருவது அரிசி போன்ற மாவுச்சத்து நிரம்பிய உணவுகள்தான்.
உங்களுக்கு உடல் பருமனும், டயபடிஸும், பிபியும் இருந்தால், குக்கர் இல்லை. மண்பானையில் சமைத்தாலும், அப்படியே அரிசியைச் சாப்பிட்டாலும் உங்கள் இதயம் டயபடிக்காலும், பிபியாலும் பிரச்னைக்குள்ளாகப் போவது உறுதி.
ஆக, புகையிலை எனும் மாவுச்சத்தை நீங்கள் பீடியாக (குக்கர்) பிடித்தாலும், சிகரெட்டாகப் (மண் பானை) பிடித்தாலும், சுருட்டாகப் (மைக்ரோவேவ்) அப்படியே வாயில் போட்டாலும் (சுட்டு சாப்பிடுவது) அதன் விளைவுகளை அனுபவிக்கத்தான் வேண்டும்.
ஆக, நாம் பகுத்தறியவேண்டியது:
குக்கரில்லாமல் அரிசி சோறு கஞ்சி வடித்து சாப்பிட்டால் இதய நோய், டயபடிக், பிபி வராதா?
வரும்.
குக்கரில்லாமல் அரிசி சோறு கஞ்சி வடித்து சாப்பிட்டால் கான்சர் வராதா?
வரும்.
குக்கரில்லாமல் அரிசி சோறு கஞ்சி வடித்து சாப்பிட்டால் கிட்னி பிரச்னை வராதா?
வரும்.
குக்கரில்லாமல் அரிசி சோறு கஞ்சி வடித்து சாப்பிட்டால் ஒபிசிட்டி வராதா?
வரும்.
குக்கரே பயன்படுத்தாத மக்களுக்கும் மேலே உள்ள பிரச்னைகள் உள்ளதா?
ஆம்.
குக்கர் பயன்படுத்தும் மக்களுக்கும் மேலே உள்ள பிரச்னைகள் உள்ளதா?
ஆம்.
சைவம் மட்டும் சாப்பிடும் மக்களுக்கும் மேலே உள்ள பிரச்னைகள் உள்ளதா?
ஆம்.
அசைவம் மட்டும் சாப்பிடும் மக்களுக்கும் மேலே உள்ள பிரச்னைகள் உள்ளதா?
ஆம்.
உலகின் எல்லா நாட்டு மக்களுக்கும், எல்லா மொழி, இன, வர்க்க மக்களுக்கும் மேலே உள்ள பிரச்னைகள் இருக்கிறதா?
ஆம்.
எனில் இதன் பொதுவான காரணி என்ன?
இவர்கள் அனைவரும் உண்ணும் பொதுவான, பிரதானமான உணவு என்ன?
மாவுச்சத்து எனப்படும் கார்போஹைட்ரேட். மற்றும் இனிப்புகள், ஜங்க், ப்ரைடு உணவுகள்.
எனில், கண்ணாடியைத் திருப்பினால் (கஞ்சி வடித்து சாப்பிட்டால்) எப்படி சார் ஆட்டோ ஓடும்?
-@-
வயிறு என்பது உடலின் இரண்டாவது மூளை.
அதற்கு குக்கர் சாதம், கஞ்சி வடித்த சாதம், மாப்பிள்ளை சம்பா, மருமகள் வம்பா என்பதெல்லாம் தெரியாது.
அதற்குத் தெரிந்தது மூன்று.
மாவுச்சத்து எனும் கார்போஹைட்ரேட்.
புரதம் எனும் ப்ரோட்டீன்.
கொழுப்பு எனும் ஃபேட்.
இதை எப்படி சரியான, தேவையான, நம் உடலுக்கேற்ற அளவுகளில் தரமாக உண்டு, உடற்பயிற்சி செய்து, விரதம் இருப்பது என்று கற்றுக்கொண்டால் எந்நாளும் ஆரோக்கியமே.
No comments:
Post a Comment